• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் வாலிபர் கைது

February 14, 2022 தண்டோரா குழு

கோவையில் கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோவை போத்தனூர் கோணவாய்க்கால்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி(34).கட்டிட தொழிலாளி.இவர் நேற்று இரவு அந்த பகுதியில் தனது நண்பர் சரவணன் என்பவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த டேவிட் ராஜா (24) என்பவர் நடந்து சென்றார்.

போதையில் இருந்த டேவிட் ராஜா அந்த வழியாக சென்ற பொதுமக்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.அப்போது, எதற்காக ரோட்டில் சென்றவர்களிடம் தகராறு செய்கிறாய்? என்று கந்தசாமி கேட்டார்.இதன் காரணமாக இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் டேவிட் ராஜா ஆத்திரம் அடைந்து கந்தசாமியை கைகளால் தாக்கியது மட்டுமின்றி, உருட்டுக்கட்டையை எடுத்து தலையில் அடித்ததாக கூறப்படுகிறது.பின்னர் அங்கிருந்து டேவிட் ராஜா தப்பி ஓடி விட்டார்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த கந்தசாமி வலி தாங்க முடியாமல் அலறினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கந்தசாமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்துவிட்டு டேவிட்ராஜா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் விரைந்து வந்து கந்தசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டிட தொழிலாளியை கட்டையால் அடித்து கொன்ற வாலிபர் டேவிட் ராஜாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க