February 15, 2022
தண்டோரா குழு
பிளாஸ்டிக் கழிவு பொருட்களை வைத்து,ஆடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தயார் செய்து சர்க்கிள் எக்ஸ் நிறுவனம் அசத்தி வருகிறது.
கோவை, ஈச்சனாரி பகுதியில் உள்ள இரத்தினம் கல்வி குழுமங்களின் ஒன்றான ஏஸ் ரைஸ்,புதிய,திட்டங்களை முன்னேடுத்து நடத்துவதில் பல்வேறு, சாதனைகளை படைத்துள்ளது.மேலும் இயற்கை வளங்களை பாதுகாக்க பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கழிவுகளை மறு சுழற்சி செய்து, அதனை அதனை மீண்டும் பயண்படுத்துவதற்காக,கோவையை சார்ந்த 700 க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களுடன், இணைத்து மாதம் 500 மெட்ரிக் டன் கழிவுகளை, மறுசுழற்சிக்கு வழிவகை செய்யப்படுவதாக ஏஸ் ரைஸ் ஒருங்கிணைப்பார்கள் தெரவித்தனர்.
இது குறித்து சர்க்கிள் எக்ஸ் அமைப்பின் நிறுவனர் விஷ்ணு வரதன்,அட்டல் இங்க்பெஷன் சென்டர்,ரைஸ் இயக்குநர்,நாகராஜன் தெரிவித்தபோது,
கோவையை சார்ந்த சர்க்கிள் எக்ஸ் எனும் நிறுவனம், இபிஆர் மூலமாக 20க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுடனும், 50க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்களுடனும் நேரடியாக இணைந்து இந்த பணியை மேற்கொள்வதாகவும், தினந்தோறும் பயண்படுத்தபடும் வாட்டர் பாட்டில், சிப்ஸ் கவர்களை உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு உடை,மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தயார்படுத்தி விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர்.