February 16, 2022
தண்டோரா குழு
கோவை போத்தனூர் சிட்கோ இந்திரா நகரை சேர்ந்தவர் சரவணன் (36).திருமணமாகாதவர். தனியார் நிறுவனத்தில் சி.என்.சி ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று மதியம் வேலை முடிந்து குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். நீண்ட நேரம் அவரது வீட்டு கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சரவணன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில், போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.