• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சியில் 93 கவுன்சிலர்கள் புதுமுகம்

February 23, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 100 கவுன்சிலர்களில் 7 பேர் மட்டுமே பழைய கவுன்சிலர்கள். மீதமுள்ள 93 பேர் புதுமுக கவுன்சிலர்கள் ஆவர்.

கோவை மாநகராட்சி 100 வார்டுகளுக்கான தேர்தல் முடிவு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த 100 வார்டுகளில், 12-வது வார்டு ராமமூர்த்தி (மார்க்சிஸ்ட் கம்யூ.,), 44-வது வார்டு காயத்ரி (காங்கிரஸ்), 46-வது வார்டு மீனா லோகு (திமுக), 47-வது வார்டு பிரபாகரன் (அதிமுக), 52-வது வார்டு இலக்குமி இளஞ்செல்வி (திமுக), 56-வது வார்டு கிருஷ்ணமூர்த்தி (காங்கிரஸ்), 72-வது வார்டு கார்த்திக் செல்வராஜ் (திமுக) ஆகிய 7 பேர் மட்டுமே பழைய முகங்கள்.

இவர்கள், ஏற்கனவே கோவை மாநகராட்சியில் கவுன்சிலர்களாக இருந்து அனுபவம் பெற்றவர்கள். மாமன்ற கூட்டத்தின்போது. காரசார விவாதத்தில் பங்கெடுத்து பேசியவர்கள். மீதமுள்ள 93 கவுன்சிலர்கள் புதுமுகங்கள் ஆவர்.
மேலும், மொத்தமுள்ள 100 கவுன்சிலர்களில், 55 பேர் பெண் கவுன்சிலர்கள். இவர்களில், மீனா லோகு, இலக்குமி இளஞ்செல்வி, காயத்ரி ஆகிய மூன்று பேர் பழைய முகங்கள் ஆவர்.

மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மிக விரைவில் நடைபெற உள்ள மாமன்ற கூட்டத்தின்போது, புதுமுக கவுன்சிலர்கள், கன்னிப்பேச்சு, பேசுவதற்கு தயார் நிலையில் உள்ளனர்.கோவை மாநகராட்சி தேர்லையொட்டி, கடந்த ஜனவரி மாதம் 25ம்தேதி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தற்போது, 100 வார்டுகளுக்கும் தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டதால், இன்று முதல் தேர்தல் விதி விலக்கிக்கொள்ளப்பட்டது.இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின், மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்தது.

மேலும் படிக்க