• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராயல் தியேட்டர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

March 1, 2022 தண்டோரா குழு

கோவை பெரிய கடை வீதி ராயல் தியேட்டர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் டிராவல்ஸ் வைத்துள்ளார். சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோகாவில் நடைபெறும் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக ஈரோட்டில் இருந்து வந்த மூன்று பேரை தனது காரில் அழைத்துக்கொண்டு கோவை வந்துள்ளார்.

அப்போது கார் பெரியகடைவீதி ராயல் தியேட்டர் அருகே வந்தபோது, காரின் முன் பகுதியில் இருந்து புகை எழுந்துள்ளது. இதையடுத்து உடனடியாக சுதாரித்துக்கொண்ட தங்கராஜ் மற்றும் காரில் இருந்த 3 பேர் உடனடியாக காரை விட்டு வெளியே இறங்கினர். மேலும் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் அருகே இருந்த தீயணைப்பான் கொண்டு தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் தீ மளமளவென பரவி எரியத் துவங்கியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். கார் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கான காரணமாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க