• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கடந்த ஆண்டு 99 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

March 2, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 99 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 146 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளது. இதில் 99 திருமணங்கள் தகவல் கிடைத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் 42 திருமணங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் 12 குழந்தை திருமணமும், பிப்ரவரி மாதத்தில் 11 திருமணமும் என கடந்த 2 மாதங்களில் மட்டும் 23 திருமணங்கள் நடந்துள்ளன.இதில் 15 திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 8 திருமணங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் காந்திபுரம், பொள்ளாச்சி,மேட்டுப்பாளையம் உள்ளிட்ட அனைத்து பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க