• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 96 வருட பாரம்பரியம் கொண்ட அங்கண்ணன் பிரியாணி புதிய கிளை துவக்கம்

March 4, 2022 தண்டோரா குழு

கோவையில் 96 வருட பாரம்பரியம் கொண்ட அங்கண்ணன் பிரியாணி ,தனது நான்காவது தலைமுறையாக, கோவை அங்கணன் பிரியாணி ஹவுஸ் எனும் உயர்தர அசைவ உணவகத்தை கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் துவக்கியது.

கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி அசைவ உணவு பிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற உணவகம் கோவை அங்கண்ணன் பிரியாணி.96 வருட பாரம்பரியம் கொண்ட இந்த குடும்பத்தின் நான்காம் தலைமுறையாக அதே குடும்பத்தை சேர்ந்த ஜெய்ஸ்ரீ அங்கணன் பழைய சுவை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட நவீன அசைவ உணவகத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தனது இரண்டாவது கிளையாக கோவை அங்கணன் பிரியாணி ஹவுஸ் எனும் உயர்தர அசைவ உணவகத்தை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள ட்ரைஸ்டார் என்க்ளேவ் வளாகத்தில் துவக்கியது. இதற்கான துவக்க விழாவில்,சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ரோட்டரி ஆளுநனரும்,பிரபல மூத்த வழக்கறிஞருமான சுந்தர வடிவேலு, ரத்னா குழுமங்களின் தலைவர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு உணவகத்தை துவக்கி வைத்தனர்.

உணவகம் குறித்து,கோவை அங்கணன் பிரியாணி ஹவுஸின் மேலாண் இயக்குனர் ஜெய்ஸ்ரீ அங்கணன் கூறுகையில்,

இங்கு பாரம்பரிய கொங்கு சுவை மாறாமல் மட்டன் பிரியாணி மற்றும் மட்டன் வறுவல், சுக்கா,சாப்ஸ்,நல்லி கறி,ஈரல்,குடல் ப்ரை என மட்டன் வகைகளை தனி சுவையுடன் பரிமாறபடுவதாகவும்,அதே போல சிக்கன்,மீன் வகைகள் என அசைவ பிரியர்களை கவரும் வகையில் இருப்பதாக குறிப்பிட்ட அவர், குறிப்பாக பிரியாணி என்றால் அதீத மசாலாவாக திகட்டாமல் அளவான,மசாலாவுடன், வீட்டு முறைப்படி கொங்கு சுவை மாறாமல் பிரியாணி பரிமாறப்படுவதாக தெரிவித்தார்.

விழாவில் 45 வருடங்களாக இதே குழுமத்தில் பணியாற்றும் தலைமை சமையல் கலை நிபுணர் காசிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க