• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இயக்குநர் ஏ.எல் விஜய் சாய் பல்லவியுடன் இரண்டாவது திருமணமா?

March 27, 2019 தண்டோரா குழு

கிரீடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். தொடர்ந்து மதராசபட்டிணம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது, ஜி.வி.பிரகாஷின் வாட்ச்மேன், தேவி 2, ஆகிய படங்களை முடித்து ஜெயலலிதாவின் பயோபிக் எடுக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் ஏ.எல்.விஜய்.

கடந்த 2014-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் நடிகை அமலாபாலுடன் இவருக்கு திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் விவாகரத்து ஆனது. இதற்கிடையில் பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இவர் தமிழில் தியா, மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடத்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும் திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில், இதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்கு விளக்கமளித்துள்ள விஜய் தரப்பு, இந்த செய்தியில் உண்மையில்லை என்றும் இருவரும் நல்ல நண்பர்களாக மட்டுமே பழகி வருவதாகவும் கூறியுள்ளது. இயக்குநர் விஜய் இயக்கத்தில் வெளியான கரு படத்தில் நடிகை சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க