• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எட்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல் – முதல் படத்திலேயே சாதனை படைத்த பிரித்வி ராஜ்

April 10, 2019 தண்டோரா குழு

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் லூசிபர். இந்த படமே நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ள முதல் படமாகும். விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டெவினோ தாமஸ், கலா பவன் சாஜன்,பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், திரைக்கு வந்து எட்டே நாளில் உலகம் முழுவதிலும் சேர்த்து 100 கோடி ரூபாய் வசூலித்து லூசிபர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

அதன்படி அமெரிக்காவில் ரூ. 3.48 கோடி, லண்டனில் 2.30 கோடி என பல்வேறு நாடுகளில் மொத்தம் 44 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துள்ளதாக லூசிபர் படக்குழு பெருமிதம் கொள்கின்றனர். இளம் இயக்குனரான நடிகர் பிருத்விராஜ் எடுத்துள்ள திரைப்படம் செய்துள்ள சாதனையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க