• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

என்னை நம்பி ஒரு நடிகனாக ஆக்கிய அனைவருக்கும் நன்றி – தனுஷ் உருக்கமான கடிதம்

May 10, 2019 தண்டோரா குழு

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். தற்போது, நடிகர், இயக்குநர், பாடகர், தயாரிப்பளார், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்துகொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ்.

இன்று இவரது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள்.17 வருடங்களுக்கு முன் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தனுஷ் அறிமுகமான நாள் இன்று. இதற்காக அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்த முக்கிய நாளில் தனக்கு துணையாக நின்ற தன்னுடைய குடும்பத்தினர்,ரசிகர்கள்,திரைத்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தனுஷ் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது கடிதத்தில்,

2002ம் ஆண்டு மே மாதம் 10 தேதி தான் நான் நடித்த முதல் படமான துள்ளுவதோ இளமை படம் வெளியானது. அந்த நாள் என் வாழ்கையை மாற்றிவிட்டது. உண்மையிலேயே இப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகிவிட்டது என்னால் நம்ப முடியவில்லை? என்னை நம்பி ஒரு நடிகனாக ஆக்கிய அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பு தான் என்னை மெருகேற்றிக்கொள்ள உதவியது. முடிந்தவரை இந்த உலகத்தில் அன்பை பரப்புவோம் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க