• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கல்லி பாய் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை

September 21, 2019 தண்டோரா குழு

92-வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் ரன்வீர் சிங், ஆலியா பட் நடித்த ‘கல்லி பாய்’ படம் அதிகாரபூர்வமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

92-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2௦2௦ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறவுள்ளது. இதையடுத்து, இந்த விருதுக்கான பரிந்துரைகள் தற்போது நடைபெற்து வருகிறது.

இதற்கிடையில், இந்தியா சார்பில் படத்தை பரிந்துரைப்பதற்கான கூட்டம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கல்லி பாய், ஆர்டிக்கல் 15, கேசரி, டியர், காம்ரேட் உரி, த சர்ஜிகல் ஸ்ட்ரைக், வடசென்னை, உள்ளிட்ட 28 படங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில் இருந்து கல்லி பாய் திரைப்படம் 92-வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்ப அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யபட்டது. இந்த படம் சர்வதேச படம் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட் நடித்த இப்படத்தை சோயா அக்தர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க