• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தடம் படக்குழு !

March 8, 2019 தண்டோரா குழு

தடையற தாக்க படத்தை தொடர்ந்து இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் இரண்டாவது முறையாக் நடித்துள்ள படம் தடம். இப்படம் மார்ச் 1ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில், தடம் படக்குழு தமிழகம் முழுவதும் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.

இதன்ஒரு பகுதியாக கோவைக்கும் வந்தனர். நேற்று கேஜி தியேட்டரில் தடம் படத்தின் இரவுக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும் போது இயக்குநர் மகிழ் திருமேனி, நடிகர் அருண்விஜய், நடிகைகள் தன்யா ஹோப், ஸ்மிருதி ஆகியோர் ரசிகர்களுக்கு தெரியாமல் தியேட்டருக்குள் சென்று படம் பார்த்தனர். படத்தின் இடைவெளி விட்டதும் பார்வையாளர்கள் போல் படக்குழுவினரும் வெளியே வந்தனர். இவர்களை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். பின்னர் படகுளுவினருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் திரை முன் ரசிகர்கள் மத்தியில் பேசிய அருண்விஜய்,

நல்ல படங்களுக்கு எப்போதும் வரவேற்பு கிடைத்துக்கொண்டே தான் இருக்கிறது. நல்ல படங்களை மக்கள் கைவிட்டதும் கிடையாது. நீங்கள் கொடுக்கும் ஊக்கம் தான் மேலும் என்னை இது போன்ற படங்களை எடுக்க தூண்டுகிறது. நிச்சயமாக உங்களை மகிழ்விக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பேன் எனக் கூறினார்.

இந்த நிகழ்வில் கோவை மாவட்ட அருண் விஜய் ரசிகர் மன்ற தலைவர் VT அருண் குமார், பொள்ளாச்சி ரசிகர் மன்ற தலைவர் வெண்ணிலா ரவிக்குமார் வெண்ணிலாவின் திரைக்களம் குழுவினர். அருண்விஜய் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க