• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுனிடம் இருந்து மிஸ் தென் இந்தியா பட்டம் பறிப்பு

June 1, 2019 தண்டோரா குழு

மிஸ் தென் இந்தியா 2016, மிஸ் குயின் ஆஃப் இந்தியா 2016, மிஸ் தமிழ்நாடு ஆகிய பட்டங்களை வென்றவர் மீரா மிதுன். தமிழில் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாங்கள் ஆகிய படங்களில் நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.

அழகிப்போட்டிகளில் ஆர்வம் உள்ள இவர் வரும் ஜும் மாதம் 3ம் தேதி சென்னை வடபழனியில் அழகிபோட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்கிடையில், சமீபத்தில் போலீசில் புகார் அளித்த அவர், தாம் தனியாக அழகிப் போட்டி நடத்த அனுமதி பெற்றுள்ளதாகவும், அதன் காரணமாக தொழில் போட்டியால் சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். மேலும், நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த மிஸ் தென் இந்தியா பட்டத்தை பறிப்பதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. தாங்கள் வழங்கிய பட்டத்தை வைத்துக்கொண்டு மோசடி வேலைகளில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மிஸ் தென் இந்தியா அமைப்பு கூறியுள்ளது. மேலும், தாங்கள் கொடுத்த பட்டத்தை மீரா மிதுனால் வேறு எங்கும் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க