• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போடா எல்லாம் விட்டுத் தள்ளு பழசையெல்லாம் சுட்டுத் தள்ளு – இசை உலக ஜாம்பவான்கள் சந்திப்பு

May 27, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவின் இசை ஜாம்பாவன்கள் என்றால் இளையராஜாவும் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் தான். இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பி பாடிய பாடலுக்கு மயங்காதே ரசிகர்களே இல்லை என்றே சொல்லலாம்.

இதற்கிடையில், தான் இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு வழக்கு தொடர்ந்தார் இளையராஜா.இதனால் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த இந்த இரு இசையின் துருவங்களுக்குள் பெரிய பிரிவு ஏற்பட்டது. இதுமட்டுமின்றி எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெளிநாடுகளில் நடத்தும் கச்சேரிகளில் தனது இசையில் உருவான பாடல்களை பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸும் அனுப்பினார். எஸ்.பி.பியும் இளையராஜா இசையில் தான் பாடிய பாடல்களைக் கூட கச்சேரிகளில் தவிர்த்து வந்தார்.இந்த காப்புரிமை பிரச்னையில் இளையராஜாவுக்கும் எஸ்.பி.பி-க்கும் இடையே மனஸ்தாபம் நீடித்தது. இதனால் நீண்ட நாட்களாக இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. இதனால் ரசிகர்களும் வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் ஜூன் மாதம் 2-ஆம் தேதி தமிழ்நாடு இசையமைப்பாளர்கள் சங்கம் ‘இசை கொண்டாடும் இசை’ என்ற நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் – இளையராஜா இணைந்து ரசிகர்களுக்கு இசை விருந்தளிக்கவுள்ளனர்.இதற்கான ஒத்திகை சென்னை பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. இதனால் நீண்ட நாட்களுக்குப் பின்னர் இருவரும் சந்தித்துக் கொண்டனர். ஒத்திகையில் இருவரும் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மனவருத்தம் காரணமாக சில காலம் பிரிந்து இருந்த இவர்கள் இன்று சந்தித்ததை அறிந்த இசை ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் படிக்க