• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீண்டும் நட்சத்திர கூட்டணியுடன் மணிரத்னம்!

January 5, 2019 தண்டோரா குழு

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் செக்கச் சிவந்த வானம். இப்படத்தில் விஜய்சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்து நடித்தனர். விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை சிறந்த மல்டி ஸ்டாரர் படமாக ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மணி ரத்னம் அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார். கடந்த முறை விஜய் மற்றும் மகேஷ் பாபு ஆகியோரை வைத்து முதலில் பேச்சுவார்த்தை தொடங்கினார். ஆனால், எதிர்பார்த்ததை விட பட்ஜெட் அதிகமானதால் அந்த முயற்சியைக் கைவிட்டார்.

இப்படத்தை தற்போது, விக்ரம், விஜய் சேதுபதி, சிம்பு மற்றும் ஜெயம் ரவி அல்லது விஜய் தேவரகொண்டாவை வைத்து மறுபடியும் எடுக்கும் முயற்சிகளில் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயும் நடிக்கலாம் என்ற புதிய தகவலும் தற்போது கசிந்து வருகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் பொங்கலுக்குள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க