• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீண்டும் மணிரத்னம் – அரவிந்த் சாமி கூட்டணி!

March 14, 2017 tamilsamayam.com

காற்று வெளியிடை படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம், ராம் சரணை இயக்குகிறார் என்பது பழைய செய்தி. அதில் புதிய அப்டேட்டாக நடிகர் அரவிந்த் சாமியும் அந்த படத்தில் இணைய இருக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் தளபதி, ரோஜா, பம்பாய், அலைபாயுதே மற்றும் கடல் ஆகிய படங்களில் நடித்தவர் அரவிந்த் சாமி. நீண்ட நாட்கள் நடிக்காமல் இருந்த அரவிந்த் சாமி, சமீபத்தில் தனி ஒருவன் படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி ஆனார். அதைத்தொடர்ந்து தமிழ்ப்படங்களில் தொடர்ந்து ஒப்பந்தம் செய்யப்பட்டுவருகிறார்.

இந்நிலையில் மணிரத்னத்தின் அடுத்தப்படத்தில் அரவிந்த் சாமி நடிக்க இருப்பதை மணிரத்னம் உறுதி செய்திருப்பதாக, படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் அரவிந்த் சாமிக்கு முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம்
தொடங்குகிறது. இதற்கு முன்னர் தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் அரவிந்த் சாமி, ராம் சரண் உடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க