• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராஜ பீமா படப்பிடிப்பில் யானை மேல் இருந்து கீழே விழுந்த ஆரவ்

February 9, 2019 தண்டோரா குழு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று பிரபலமானவர் ஆரவ். இவர், தற்போது ‘ராஜா பீமா’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் காடு சார்ந்த படம் என்பதால் ஆரவ் உடன் ஒரு யானையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. படத்தின் முக்கியமான காட்சிகளை தாய்லாந்தில் படம் பிடிக்கும் குழுவினர், ஒரு சில காட்சிகளை பொள்ளாச்சியிலும் படம் பிடித்தனர்.

இதற்கிடையில், கடந்த 7 நாட்களாக கஞ்சன்புரியின் அடர்ந்த காடுகளில், ஓங்கி வளர்ந்த ராட்சச மரங்கள் இடையேயும் படமாக்கி வருகின்றனர். அதன்படி யானை மீது ஆரவ் அமர்ந்திருப்பது போல் ஒரு காட்சி பாடமாக்கப்பட்டது. அப்போது ஆரவ் யானையிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதையடுத்து, படப்பிடிப்பு குழுவினர் மருத்துவ உதவியை உடனே நாடினர். முதலுதவி சிகிச்சைக்கு பின் ஆரவ் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

மேலும் படிக்க