• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விஜய் சேதுபதியுடன் இணையும் நயன்தாரா, சமந்தா..!

February 14, 2020

சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அந்தக் கதையில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, லைகா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது.

இதற்கிடையில், புதிய கதையொன்றை தயார் செய்தார் விக்னேஷ் சிவன். இந்நிலையில், காதலர் தினமான இன்று வாழ்த்துக்களுடன் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

காத்துவாக்குல ரெண்டு காதல் என்று பெரியரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். லலித் குமார் தயாரிக்கிறார்.

2015-ம் ஆண்டு விஜய் சேதுபதி – விக்னேஷ் சிவன் கூட்டணி இணைந்து ’நானும் ரவுடிதான்’ என்ற மாபெரும் ஹிட் படத்தைக் கொடுத்தது. தனுஷ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் தற்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மேலும் படிக்க