• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விருதுக்காக விபரீத முடிவெடுத்த உதயநிதி ஸ்டாலின்

April 3, 2017 தண்டோரா குழு

இயக்குனர் பிரபு சாலமன் தொடரி படத்தை தொடர்ந்து கும்கி படத்தின் இரண்டாம் பாகம் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதற்கிடையில் தனது அடுத்த படம் குறித்து அவர் சமீபத்தில் மனம் திறந்துள்ளார்.

பாலைவன பகுதிகளில் நடக்கும் கதையை மையமாக வைத்து தனது அடுத்த படத்தை எடுக்கவுள்ளதாகவும் அதற்காக உதயநிதி ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எழில் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளிவரவுள்ளது. மேலும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ‘இப்படை வெல்லும்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் உதயநிதி விரைவில் பிரபு சாலமன் இயக்கும் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷூட்டிங் முழுக்க முழுக்க வெயில் வறுத்தெடுக்கும் பாலைவனத்தில்தான் நடக்கப் போகிறதாம்.விருது வாங்கும் அளவுக்கு கதை வலிமையாக இருக்கிறதாம். அதனால்,விருதுக்காகஉதயநிதிதுணிந்து இந்த விபரீத முடிவை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க