• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விஷாலை விமர்சிப்பதை விட்டுவிட்டு சேரன் படம் எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் – மிஷ்கின்

March 15, 2017 தண்டோரா குழு

“விஷாலை விமர்சிப்பதை விட்டுவிட்டு இயக்குநர் சேரன் படம் எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியைச் சேர்ந்த இயக்குநர் மிஷ்கின் தெரிவித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால் கோவையில் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்தார். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் அவருடன் இணைந்து போட்டியிடும் இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா, எஸ்.ஆர். பிரபு, நடிகர்கள் உதயா, நந்தா ஆகியோரும் உடன் இருந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் மிஷ்கின், “இயக்குநர் சேரன், விஷாலைப் பற்றி தரக் குறைவாகப் பேசுவது கவலை அளிக்கிறது. விஷால் சினிமாவிற்காக மிகவும் கடுமையாக உழைக்கிறார். இயக்குநர் சேரன், தாணு போன்றவர்கள் ஆதாரமற்ற புகார்களைத் தெரிவிக்கின்றனர்.

இயக்குநர் சேரன் மூத்தவர் என்ற அடிப்படையில் அவரை நான் விமர்சிக்க விரும்ப விரும்பவில்லை. எனவே, விஷாலை விமர்சிப்பதை விட்டுவிட்டு சேரன் படம் எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

மேலும் படிக்க