• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஃபார்ம்வில் கேம் வடிவமைப்பாளருடன் இணைந்த ராஜமௌலி

February 10, 2017 tamilsamayam.com

பிரம்மாண்ட ‘பாகுபலி’ படத்தின் இயக்குனர் ராஜமௌலி, ‘ஃபார்ம்வில்’ மற்றும் ‘லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்’ உள்ளிட்ட பிரபல மொபைல் விளையாட்டுக்களை வடிவமைத்த மார்க் ஸ்காக்ஸ் உடன் கைக்கோர்த்திருக்கிறார்.

மார்க் ஸ்காக்ஸ் வடிவமைத்த மொபைல் விளையாட்டுகள் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், ‘பாகுபலி’ மொபைல் விளையாட்டை வடிவமைக்க இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி மார்க் ஸ்காக்ஸ் உடன் இணைந்துள்ளார். இந்த தகவல் பாகுபலி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் சூசகமாக பதிவிடப்பட்டுள்ளது.

‘பாகுபலி’ வெறும் திரைப்படமாக மட்டுமல்லாமல் நாவல், காமிக்ஸ், அனிமேட்டட் சீரிஸ் என பல்வேறு வகைகளில் பிரபலமாகி வருகிறது. தற்போது ‘பாகுபலி 2’ இறுதிக் கட்டப் பணிகளை எட்டியுள்ள நிலையில், இப்படம் திட்டமிட்டப்படி வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள ‘பாகுபலி 2’ தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க