July 17, 2017
tamilsamayam.com
இசை புயல் ஏ.ஆா். ரகுமானுக்கு இசை மட்டும் தான் மொழி என்று அவருக்கு ஆதரவாக நடிகா் தனுஷ் டுவிட்டாில் கருத்து தொிவித்துள்ளாா்.
ஏ.ஆா். ரகுமான் தனது 25 வருட இசை பயணத்தையொட்டு ஒவ்வொரு பகுதியாக சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறாா். அதன்படி கடந்த 8ம் தேதி லண்டனில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பென்னி தயால், நீத்தி மோகன், ஹாிசரன், ஜொனிடா காந்தி, ஜாவத் அலி போன்ற பிரபல பாடகா்கள் கலந்து கொண்டனா்.
இசை நிகழ்ச்சியில் தமிழ் பாடல்கள் அதிகமாக பாடப்பட்டதாகவும் இதனால் சிலா் வெறுப்படைந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. சமூக வளைதளங்களில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ள இந்நிகழ்வுக்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை தொிவித்து வருகின்றனா்.
இன்று காலை நடிகா் தனுஷ் தனது டுவிட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில் ஏ.ஆா்.ரகுமானுக்கு ஆதரவாக கருத்து தொிவித்துள்ளாா். அவா் வெளியிட்டுள்ள பதிவில் ரகுமானுக்கு இசை மட்டுமே மொழி. இசையை தவிற வேறு மொழிகள் அவருக்கு கிடையாது என்று கூறியுள்ளாா்.