September 19, 2018
தண்டோரா குழு
அறிமுக இயக்குநர் விஜய்குமார் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டுதமிழில் சாதி அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘உறியடி’. இப்படத்தில் அவரே ஹீரோவாக நடித்திருந்தார்.
இப்படம் திரையரங்குகளில் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. இதுமட்டுமின்றி பல்வேறு விருதுகளை வென்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தை நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விஜய்குமாரே கதையின் நாயகனாக நடித்து, இயக்கவுள்ளாராம்.வெகு விரைவில் இப்படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர்கள் மற்றும் பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.