November 24, 2018
தண்டோரா குழு
செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் சிம்பு படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததால் தனக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் குற்றம் சாட்டியதையடுத்து, அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்போவதாக தகவல்கள்வெளியானது. இதற்கிடையே, இந்த படத்திற்கு ரெட் கார்ட் போட வேண்டும் என்று விஷால் முயற்சிப்பதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்தது.
எனினும், சிம்பு ரசிகர்கள் விஷாலை கடுமையாக விமர்சனம் செய்ய, சிம்பு தனது ரசிகர்களை அமைதிப்படுத்தினார். இதற்கிடையில், தற்போது, விரைவில் இப்படத்தின் சிங்கிள் டிராக் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தின் பாடல் வரிகளை பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” என வரிகள் வருகின்றன. இந்த பாடல் தான் விரைவில் ரிலீசாகும் எனத் தெரிகிறது.