May 23, 2017
தண்டோரா குழு
பிரபல நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி மாதவரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை மாதவரம் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் காமெடி நடிகர் பாலாஜி. இவர் தற்போது தனியார் தொலைக்காட்சியில் நடுவராக இருந்து வருகிறார். இருவருக்கும் நித்யா என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனாது. இவர்களுக்கு போர்ஷிகா(6), என்ற பெண் இருக்கிறார்.
கருத்து வேறுபாடு காரணமாக, சில மாதங்களாகவ இருவருக்கும் இடையே பிரச்னை அதிகரித்துள்ளது. பிரபல ‘டிவி’யின் நடன நிகழ்ச்சியிலும் இது வெளிப்பட்டது. எனினும் அங்கிருந்த முக்கிய பிரமுகர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் நித்யா, மாதவரம் போலீசில் நேற்று கணவர் பாலாஜி மீது புகார் அளித்துள்ளார். அதில், தன் கணவர் தன் சமுதாயத்தை பற்றி தரக்குறைவாக பேசி, தன்னை கொடுமை செய்வதாக குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.