April 18, 2018
தண்டோரா குழு
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் ‘மெர்சல்’.பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும் இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்தது. சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான இந்தப் படத்தை ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்திருந்தது.இப்படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தது.
இதுமட்டுமின்றி சமீபத்தில்,’மெர்சல்’படத்திற்கு பிரிட்டன் விருது கிடைத்தது.இந்நிலையில்,தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க ‘மெர்சல்’ திரைப்படத்துக்கு அழைப்பு வந்துள்ளதாக ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.