• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகைகள் குறித்து டுவிட்டரில் சர்ச்சை கருத்து தெரிவித்த ஞானவேல் ராஜாவின் மனைவி

March 21, 2018 தண்டோரா குழு

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் மனைவி நேஹா அண்மையில் ட்விட்டர் பக்கத்தில் செய்த பதிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேஹா தனது ட்விட்டர் பக்கத்தில்,”சில நடிகைகள் குடும்பத்தை உடைப்பவர்கள். இவர்கள் பாலியல் தொழில் செய்வதை விட மோசமானவர்கள்.இதை பொதுவாக சொல்லவில்லை. இது ஒரு சிலருக்கு மட்டுமே பொருந்தும்.சில நடிகைகள் திருமணம் ஆனவர்களை தான் குறி வைக்கிறார்கள்.இம்மாதிரியான நடிகைகளின் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.இதையடுத்து, பலரும் அவர் கணவருக்கு இது நடந்ததா என்று கேள்வி எழுப்ப⁉,அந்த பதிவை ட்விட்டரில் இருந்து நீக்கிவிட்டார்.

பின்னர் அதற்கு விளக்கமளித்த நேஹா, தான் பதிவிட்டது தன்னுடைய பிரச்சினை இல்லை என்றும் அவர் கணவருடன் எந்த விதமான குழப்பமும் இல்லை.ஆனால்,என்னை சுற்றி நடக்கும் ஒரு சில விஷயங்களை என்னை பாதித்துள்ளது.ஒரு சில நடிகைகள் திருமணமான ஆண்களின் வாழ்க்கையில் விளையாடி அந்த குடும்பத்தின் அமைதியை குழைத்து விடுகின்றனர்”என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க