November 16, 2017
தண்டோரா குழு
கோபி நயினார் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘அறம்’. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தற்போதுள்ள சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. மேலும்,படம் வெளியான மறுநாளில் இருந்தே படத்தின் வசூல் தொடங்கினாலும், பெரும் லாபத்தை ஈட்டியுள்ளது.
இந்நிலையில், ‘அறம்’ படத்தின் தொடர்ச்சியாக 2-ம் பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.இரண்டாம் பாகத்தின் பணிகள் துவங்கப்பட்டு விட்டதாகவும் நயன்தாராவும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளவும் படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் கூறியுள்ளார்.மேலும்,விரைவில் படக்குழு குறித்த முழுவிவரங்களும் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.