February 9, 2018
தண்டோரா குழு
கார்த்தியின் ‘காற்று வெளியிடை’ படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கவிருக்கும் புதிய படத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பகத் பாசில், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளார்கள்.
இதற்கிடையில், பகத் பாசில் இப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இப்படத்திற்கு ‘செக்கச்சிவந்த வானம்’ என தலைப்பு வைக்கபட்டுள்ளது.
போஸ்டரில் சிம்பு, அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோரது புகைப்படங்கள் மட்டுமே இருந்தது. இதில் பகத் பாசில் புகைப்படம் எதுவும் இடம் பெறவில்லை. இதனால், பகத் பாசில் இப்படத்தில் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ளார் என்பது உறுதியானது.
இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார்.
இப்படத்தை இயக்குநர் மணிரத்னமின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. வெகு விரைவில் படத்தின் ஷூட்டிங்கை துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.