• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப் பச்சன் வீடு திரும்பினார்!!

February 10, 2018 www.tamilsamayam.com

நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்தி நடிகர் அமிதாப்பச்சன், மருத்துவ பரிசோதனைக்குப் பின் வீடு திரும்பினார்.

இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்ற அனைவராலும் புகழப்படுபவர் அமிதாப்பச்சன். இவர் 1969 யில் இருந்து திரையுலகில் நடித்து வருகிறார். இவர் தொகுத்து வழங்கிய கோன்பனேகா குரோர்பதி என்ற கேம் ஷோ, இந்தியா முழுவதும் இவருக்கு அதிக பெயரை தேடிக்கொடுத்தது.

இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணிக்கு இவர் மும்பை பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல் நிலை மோசமாக உள்ளது என்று செய்திகள் பரவியது. ஆனால் அவர் வழக்கமாக செய்துகொள்ளும் உடல் பரிசோதனைக்கு சென்றதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, தனது உடல் பரிசோதனை முடிந்த பின் நேற்று இரவே அமிதாப் பச்சன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். அவருடன் அவரது மகனும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன் உடனிருந்தார்.

மேலும் படிக்க