• Download mobile app
10 Apr 2025, ThursdayEdition - 3347
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீண்டும் ரஜினியுடன் இணையும் மணிரத்னம்..?

May 19, 2017 tamilsamayam.com

தனது இயக்கத்தில் மீண்டும் ரஜினியை நடிக்க வைக்க இயக்குநர் மணிரத்னம் முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

கடந்த 1991-ஆம் ஆண்டு ரஜினி மற்றும் மம்முட்டி நடிப்பில் வெளியான தளபதி திரைப்படம் மணிரத்னத்திற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவிலும் இந்த படம் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி எப்போது இணையும் ? என தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் தனது படத்தில் மம்முட்டி மற்றும் ரஜினியை நடிக்க வைக்க மணிரத்னம் முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட்டையும் மணிரத்னம் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இருவரும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால், வரும் 2018-ஆம் ஆண்டு இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது 2.0 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பும் 2017-ஆம் ஆண்டு இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் 2018-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருவரிடமும் மணி ரத்னம் கால்ஷீட் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க