• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதன்முறையாக பாலிவுட் படத்தை இயக்கும் விஷ்ணுவர்தன்

May 4, 2018 தண்டோரா குழு

தமிழில் ‘பில்லா’,’அறிந்தும் அறியாமலும்’,’பட்டியல்’ போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன்.கடைசியாக ஆர்யா கிருஷ்ணா நடிப்பில் உருவான யட்சன் படத்தை இயக்கினார்.

இரண்டு வருடங்களுக்கும் மேலாக எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்த விஷ்ணுவர்தன்,தற்போது தன்னுடைய அடுத்த பட வேலைகளில் இறங்கியுள்ளார்.முதன்முறையாக ஒரு பாலிவுட் படத்தை இயக்க இருக்கிறார்.இதுகுறித்த அறிவிப்பை பாலிவுட்டின் பிரபல இயக்குநரும்,தயாரிப்பாளருமான கரன் ஜோஹர் வெளியிட்டுள்ளார்.

கார்கில் போரின் போது உயிர்த் துறந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி அந்த படம் உருவாக இருப்பதாகவும்,அதில் விக்ரம் பத்ராவாக பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தர்மா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கரண் ஜோஹர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஸ்ரீவஸ்தவா கதை எழுதுகிறார்.அடுத்த வருடம் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க