May 17, 2018
தண்டோரா குழு
விஜயகாந்த் தான் என் நண்பர் ரஜினி,கமல் அல்ல என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
ச.ம.க. துணை பொதுச் செயலாளர் சுந்தர் இல்ல விழா பாளைமார்க்கெட்டில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.இவ்விழாவில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார்.அப்போது சரத்குமார் செய்தியாளார்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
அரசியலிலும் சரி கலைத்துறையிலும் சரி விஜயகாந்த் எனக்கு நண்பர்.நான் கஷ்டப்பட்ட நேரத்தில் எனக்கு உதவியவர்.ஆனால்,கமலும்,ரஜினியும் என் நண்பர்கள் அல்ல,கலைத்துறையில் பயணிப்பவர்கள்.வரும் சட்டமன்ற தேர்தலில் இறைவன் நினைத்தால் விஜயகாந்துடன் இணைந்து செயல்படுவோம்.தென்காசி தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவேன் எனக் கூறினார்.