• Download mobile app
17 Apr 2025, ThursdayEdition - 3354
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்திற்கு தடைகோரி வழக்கு

December 19, 2018 தண்டோரா குழு

நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

96 படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் நாளை வெளியாகவுள்ள படம் சீதக்காதி. இப்படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரனிதரன் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியின் 25வது படமான இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் வள்ளல் சீதக்காதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கலாம் என புகார் தெரிவித்து கீழக்கரையைச் சேர்ந்த முகமது சலையா உசேன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து, படம் நாளை வெளியாக உள்ள நிலையில் வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க