• Download mobile app
02 Apr 2025, WednesdayEdition - 3339
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பிய சூர்யா ரசிகர்கள்!

May 3, 2017 tamilsamyam.com

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் என்ன ஆனது என்று விக்னேஷ் சிவனிடம் சூர்யா ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“போடா போடி”, ” நானும் ரவுடி தான் ” ஆகிய படங்களை தொடர்ந்து விக்னேஷ் சிவன் தற்போது இயக்கி வரும் படம் “தானா சேர்ந்த கூட்டம்”. இந்தப் படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், சரண்யா, செந்தில், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜூலை மாதம் இப்படம் திரைக்கு வருகிறது.

பெரும்பாலும் பிரபலங்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் நடந்து கொண்டிருக்கும்போதே பர்ஸ்ட் லுக் வெளியிட்டு விடுவார்கள். ஆனால் இந்த படம் இறுதிகட்டத்தை நெருங்கிய பிறகும் பர்ஸ்ட் லுக் இன்னும் வெளியாகவில்லை. இது சூர்யா ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதனால், விக்னேஷ் சிவனின் இணைய பக்கத்திற்குள் சென்று பர்ஸ்ட் லுக் குறித்து சூர்யா ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், முதலில் ரெடி பண்ணிய பர்ஸ்ட் லுக் சரியில்லாததால் வேறு ஒரு பர்ஸ்ட் லுக்கை படக்குழு தயார் செய்து வருவதாகவும், விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு சார்பில் கூறப்படுகிறது.

மேலும் படிக்க