• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

படப்பிடிப்பில் நடிகை அமலாபால் காயம்!

August 14, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் தற்போது அறிமுக இயக்குநர் வினோத் இயக்கி வரும் ‘அதோ அந்த பறவை போல’ படத்தில் நடித்து வருகிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை என்பதால் இப்படத்தில் அமலாபாலுக்கு பல சண்டைக்காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில்,அண்மையில் சண்டைக் காட்சியில் நடித்த போது அமலாபாலுக்கு அவரது வலது கையில் அடிபட்டுள்ளது.எனினும் அவர் தொடர்ந்து நடித்து வந்துள்ளார்.

இதற்கிடையில்,வலி அதிகமானதால் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமலாபால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வலது கையின் தசைநாரில் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.இதனால்,அமலாபாலை நன்கு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

‘அதோ அந்த பறவை போல’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ள நிலையில் நடிகை அமலா பாலுக்கு கையில் காயம் ஏற்பட்டிருப்பதால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க