• Download mobile app
06 Apr 2025, SundayEdition - 3343
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

மனித உரிமை போராளிகளுக்கு கிடைத்த மரியாதை: ஜோக்கர் இயக்குனர்

April 8, 2017 tamilsamayam.com

ஜோக்கர் படத்திற்கு சிறந்த தமிழ்படத்திற்கான 64வது தேசிய திரைப்பட விருது கிடைத்தது.

டெல்லியில் நேற்று 64வது தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டது. இதில் இயக்குனர், தயாரிப்பாளரான பிரியதர்ஷன் தலைமையிலான குழு 64வது தேசிய திரைப்பட விருது பட்டியலை வெளியிட்டது. இதில் சிறந்த தமிழ் படத்திற்கான 64வது தேசிய திரைப்பட விருது ஜோக்கர் படத்திற்கு கிடைத்தது.

இது தொடர்பாக ஜோக்கர் படத்தின் இயக்குனர் ராஜூ முருகன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அதில் கூறியிருப்பதாவது:

ஜோக்கர் படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. நான் விருதுக்காக படம் எடுப்பதில்லை. சரியாக படம் எடுத்து தியேட்டருக்கு கொண்டு போய் சேர்த்தாலே அந்த படத்திற்கு விருது கிடைத்தது மாதிரிதான்.

ஜோக்கர் படத்தை அரசியல் படமாக கொடுத்திருப்பது எனக்கு பின்னால் வருபவர்களுக்கு நிச்சயமாக வழிகாட்டும். இப்படம் மனித உரிமை போராளிகள் பற்றிய படம். இப்படத்திற்கு விருது கிடைத்ததன் மூலம் அவர்களுக்கான மரியாதையை பெற்றுக்கொடுத்ததாக கருதுகிறேன். அதிகாரத்தை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களின் குரலுக்கு கிடைத்த மரியாதையாக நினைக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க