• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜோதிகாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

September 11, 2018 தண்டோரா குழு

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவுடனான காதல் திருமணத்திற்குப் பிறகு நடிக்காமல் இருந்தார்.நீண்ட இடைவேளைக்கு பின் 36 வயதினிலே படம் மூலம் ரீ என்டரி கொடுத்தார்.அப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து `மகளிர் மட்டும்’ பாலா இயக்கிய `நாச்சியார்’ ஆகிய படங்களிலும் நடித்து மீண்டும் பிசியான நடிகையாக வலம் வரத் துவங்கினர்.தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள `செக்கச்சிவந்த வானம்’ படத்திலும், ராதா மோகன் இயக்கியுள்ள `காற்றின் மொழி’ படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில்,ஜோதிகாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.`ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் படத்தில் ஜோதிகா நடிக்க உள்ளார்.இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.இப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்குகிறார்.அடுத்த மாதம் இப்படம் துவங்கவுள்ளது எனவும் மற்ற நடிகர்கள் தொழிநுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க