August 17, 2018
தண்டோரா குழு
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது.கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருவதால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 167 பேர் உயிரிழந்துள்ளனர்.50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.அந்தவகையில் தமிழ்த்திரையுலகினர் சார்பில் நடிகர்கள் கமல்,விஷால்,கார்த்தி,சூர்யா,விஜய் சேதுபதி,தனுஷ்,சித்தார்த் மற்றும் நடிகைகள் ரோஹிணி,ஸ்ரீபிரியா உள்ளிட்ட பலர் ஏற்கனவே நிதி உதவிகள் அளித்துள்ளனர்.
இந்நிலையில்,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக முதல்வர் வெள்ள நிவாரணநிதிக்கு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.