August 27, 2018
தண்டோரா குழு
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து,100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்தது.கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 பேருக்கு மேலாக உயிரிழந்துள்ளனர்.பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன.தற்போது வெள்ளம் வடிய துவங்கி விட்ட நிலையில் நிவாரண முகாம்களிலிருந்து மக்கள் வீடு திரும்பி வருகின்றனர்.இதனால் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை சன்னிலியோன் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு 1,100 கிலோ அரிசி,பருப்பு போன்றவற்றை லாரியில் அனுப்பி வைத்து இருக்கிறார்.மேலும்,அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,”நான் அனுப்பிய உதவிகள் மிகவும் குறைவானது என்று எனக்கு தெரியும்.அதிகம் கொடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக உள்ளது” என்றுக் கூறியுள்ளார்.