• Download mobile app
17 Apr 2025, ThursdayEdition - 3354
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மிஷ்கினால் சூப்பர் டீலக்ஸ் படத்தில் இருந்து விலகிய நதியா – ஏன்?

November 17, 2018 தண்டோரா குழு

ஆரண்ய காண்டம் படம் மூலம் இந்திய அளவில் கவனிப்பை பெற்றவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.இந்த படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை பெற்ற இவர்,7 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கியிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.

படத்தில் ஷில்பா என்னும் திருநங்கை வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார்.சமந்தா வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.மேலும் பகத் பாசில்,ரம்யா கிருஷ்ணன்,மிஷ்கின்,காயத்ரி,பகவதி பெருமாள் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில்,ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருந்த கதாப்பாத்திரத்தில் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகை நதியா தான்.சில நாட்கள் படப்படிப்பிலும் கலந்து கொண்ட அவர் திடீரென்று விலகியுள்ளார்.இந்நிலையில் இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

படத்தில் மிஷ்கினை,நதியா கன்னத்தில் அறைவது போன்ற ஒரு காட்சி இரண்டு நாட்கள் படமாக்கப்பட்டதாகவும்,காட்சி யதார்த்தமாக வர வேண்டும் என்பதற்காக மிஷ்கின்,தன்னை நிஜமாகவே அடிக்குமாறு நதியாவிடம் கூறியுள்ளார்.இதனால் நதியா மிஷ்கினை நிஜமாகவே அடித்துள்ளார்.எனினும்,56 முறை டேக் போகியும் அந்த சீன் சரியாக வரவில்லையாம்.

இதனால் கோபமடைந்த மிஷ்கின் மிகவும் கோவமாக “இனிமேல் நதியாவிடம் அடிவாங்கி நடிக்க மாட்டேன்.அவர் விலகவில்லை என்றால் நான் விலகி கொள்கிறேன்,நடிக்க வராதவங்களை ஏன் நடிக்க வைக்கிறீங்க⁉” என இயக்குனரிடம் சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த பிரச்சினை நதியா முன்னிலையிலேயே நடந்ததால்,திடீர் என நதியா இந்த படத்தில் இருந்து தான் விலகுவதாக கூறி மிகவும் கோபமாகசென்று விட்டாராம்.அதன் பின் நதியாவிற்கு படத்தில் அந்த கதாப்பாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க ஒப்பந்தமாகி இரண்டே டேக்கில் அந்த காட்சியை படமாக்கியுள்ளனர்.

மேலும் படிக்க