• Download mobile app
17 Apr 2025, ThursdayEdition - 3354
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எனக்கும் அமலா பாலுக்கும் திருமணமா? விஷ்ணு விஷால் காட்டமாக பதிவு!

November 27, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால்.வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்,ஜீவா,வெண்ணிலா கபடிக் குழு, முண்டாசுப்பட்டி,இன்று நேற்று நாளை எனப் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

விஷ்ணு விஷால் கடந்த 2011-ல் நடிகரும்,இயக்குநருமான கே.நட்ராஜ் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இதையடுத்து,இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.எனினும்,சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த நிலையில்,இருவருக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. அதை போல்,இயக்குனர் ஏ.எல் விஜயை விவாகரத்து செய்த பின்னர் நடிகை அமலாபால் பல படங்களில் நடித்துள்ளார்.

அவர் தற்போது “ஆடை,அதோ அந்த பறவை போல” உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார்.இதற்கிடையில் ‘ராட்சசன்’ படத்தில் விஷ்ணு விஷால்,அமலாபால் இணைந்து நடித்திருந்தனர்.இருவரும் முதல் திருமண விவாகரத்து பெற்றுள்ள நிலையில்,இவர்கள் மறுமணம் செய்ய உள்ளதாக செய்திகள் பரவின.

இந்நிலையில்,இந்த செய்தியை குறிப்பிட்டு நடிகர் விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“என்ன ஒரு அபத்தமான செய்தி தயவு செய்து பொறுப்புடன் செயல்படுங்கள்.நாங்களும் மனிதர்களே எங்களுக்கும் வாழ்க்கை குடும்பம் உள்ளது.எழுத வேண்டும் என்பதற்காக எதையும் எழுதாதீர்கள் என்று கட்டமாக பதிவிட்டுள்ளார்”.
.

மேலும் படிக்க