• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுவையான பன்னீர் கட்லெட் செய்ய…!

September 1, 2018 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

பன்னீா் – 500 கிராம்
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 4
பச்சை மிளகாய் – 7
கறிவேப்பிலை – 2 கொத்து
பூண்டு – 1 ½மேஜைக்கரண்டி
இஞ்சி – 1 ½மேஜைக்கரண்டி
சோம்பு தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1½ மேஜைக்கரண்டி
நல்ல மிளகு தூள் – 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு – 3

பொரிக்க தேவையான பொருட்கள்:

சோள மாவு – 4 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பிரட் தூள் – 1½ கப்
எண்ணெய் – பொரிக்க

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.பிறகு சிறிது உப்பு சேர்க்கவும் ஒரு குக்கரில் உருளை கிழங்குடன் நீர் சேர்த்து வேக வைக்கவும்.2 விசில் வரும் வரை வைக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு கலவையை சேர்க்கவும் அவை நன்கு வதங்கியதும் சோம்பு,கரம் மசாலா மற்றும் நல்ல மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.பின்னர் பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.பின்பு அதனை வெங்காயக் கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும்.மீண்டும் 5 நிமிடம் வேக வைக்கவும்.பின்பு தீயை அணைத்து அதனை ஆற வைக்கவும்.

பின்பு உருளைகிழங்கை நன்கு மசித்துக் கொள்ளவும்.பின்பு பன்னீர் கலவையை உருளைகிழங்குடன் சேர்த்து நன்கு பிசையவும்.பின்பு அதனை சிறு சிறு பகுதிகளாக பிரித்து உருண்டைகளாக உருட்டி,தட்டையாக செய்து கொள்ளவும்.பின்பு சோள மாவுடன் நீர் சேர்த்து கலவை தயாரித்து கொள்ளவும்.

கட்லெட்களை சோள மாவுக் கலவையில் முக்கி பின்பு பிரட் தூளில் போட்டு எடுத்து அதனை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.சுவையான பன்னீர் கட்லெட் தயார்.

மேலும் படிக்க