• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பனை ஓலை கொழுக்கட்டை…!

December 5, 2017 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – முக்கால் கிலோ
கருப்பட்டி – அரை கிலோ
ஏலக்காய் – 8
தேங்காய் – ஒரு மூடி துருவியது
பனை ஓலை – 10 ஓலைகள்

செய்முறை:

பச்சரிசியை ஊறவைத்து களைந்து நிழலில் உலர்த்தி மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும். கடாயை காயவைத்து துருவிய தேங்காய் ஈரம்போக வறுத்துக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவு, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை போடவும்.

கருப்பட்டியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து இளம்பாகு பதத்தில் காய்ச்சவும். பின் இறக்கி வடிகட்டி மாவுடன் பிசையவும். ஓலையை அரை அடி நீளத்திற்கு நறுக்கி பிசைந்த மாவை அதன் நடுவில் வைத்து இட்டித் தட்டில் வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பனை ஓலை கொழுக்கட்டை தயார்.

மேலும் படிக்க