• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கரும்புக்கடைப் பகுதியின் நீண்ட நாள் கோரிக்கைகள் சிறுபான்மை நலத்துறை அமைச்சரிடம் மனு

October 18, 2023 தண்டோரா குழு

சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் வழங்கும் விழாவிற்கு கோவை வந்த
தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மக்கள் தொடர்புச் செயலாளர் அப்துல் ஹக்கீம் சந்தித்தார்.

இச்சந்திப்பில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக பல்வேறு வகையான நலத்திட்டங்களை வழங்கியமைக்கு பாராட்டு தெரிவித்த அப்துல் ஹக்கீம் , கோவை கரும்புக்கடைப் பகுதியின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய அரசு மேல்நிலைப் பள்ளி,தொடக்கநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளியாகத்தரம் உயர்த்துதல், அனைத்து வசதிகளுடன் கூடிய வங்கி, நூலகம், ராஜ வாய்க்கால், நொய்யல் ஆறு தூர் வாருதல்,உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலபணிகள் விரைந்து முடித்தல், மற்றும் மாணவர்கள் விளையாடிட மைதானம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு மனுவையும் வழங்கினார்.

மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் கரும்புக்கடைப் பகுதியில் உடனடியாக நலத்திட்ட உதவிகளை ஆரம்பிக்க ஆவணம் செய்வதாக தெரிவித்தார்.

இச்சந்திப்பில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி மற்றும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க