• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராயல்கேர் மருத்துவமனையில் தேசிய பாதுகாப்பு தினம் அனுசரிப்பு

March 4, 2024 தண்டோரா குழு

கோவை ராயல்கேர் மருத்துவமனையில் தீ மற்றும் மருத்துவமனை பாதுகாப்பு துறை சார்பில் தேசிய பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

மருத்துவமனையின் தலைவர் டாக்டர் K.மாதேஸ்வரன் தலைமையில் பாதுகாப்பு துறையின் தலைவர் டாக்டர் M.சுதாகரன், மருத்துவ இயக்குனர் டாக்டர் B.பரந்தாமன் சேதுபதி,முதன்மை செயல் அலுவலர் டாக்டர்
K.T. மணிசெந்தில்குமார்,தலைமை நுண்ணுயிரியலாளர் & தர அமைப்பு தலைவர் டாக்டர் D.காந்திராஜ் , மேலாளர் K.லலித் சித்ரா, பாதுகாப்பு அதிகாரி செல்வகுமார் மற்றும் மருத்துவர்கள் , ஊழியர்கள் முன்னிலையில் விஞ்ஞானி டாக்டர் ராமன் சிவகுமார் மருத்துவமனை வளாகத்தில் தேசிய பாதுகாப்பு கொடியை ஏற்றினார்.

பின்னர் கலந்து கொண்ட அனைவரும் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்றனர்.
அதன்பின், மருத்துவமனை கருத்தரங்க வளாகத்தில் சிறப்பு விருந்தினர் சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த சிறப்புரையில் மறுசுழற்சி முறையில் பிளாஸ்டிக் சாதனங்கள் இயற்கை வளம் குன்றாமல் மீண்டும் பயன்படும் வழி வகைகளை விளக்கினார்.

அதனை தொடர்ந்து மருத்துவமனையில் தீயின் பல்வேறு வகைகளையும் , அதனை அணைக்கும் நுட்பங்கள் பற்றிய விரிவான செயல்முறை விளக்கம் நடைபெற்றது.

மருத்துவமனை தலைவர் டாக்டர் K.மாதேஸ்வரன் கூறும்பொழுது,

மருத்துவமனையில் பிளாஸ்டிக் உபயோகம் கூடிய மட்டிலும் அல்லது முடிந்த அளவு தடை செய்யப்பட்டதாகவும் , சுற்று சூழல் பாதுகாப்பிற்காக உயிரின் சுவாசம் என்னும் உன்னத திட்டத்தின் மூலம் 100 மாதங்களில் 10 கோடி மரங்கள் நடும் முயற்சியில் இதுவரை 75 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமையான இயற்கை சூழல் உள்ள மாவட்டத்தை உருவாக்க பங்களித்து வருகிறது என கூறினார்.

முன்னதாக நடைபெற்ற பாதுகாப்பு தின விழாவில் 500 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் , ஊழியர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க