• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்கேட்டிங் போட்டியில் கோவை மாணவர் தங்கம் வென்று அசத்தல்

February 7, 2023 தண்டோரா குழு

ஏரோஸ்க்கட்டோபார் பால் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக தேசிய அளவிலான ஏரோஸ்க்கட்டோபார் ஸ்கேட்டிங் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் தேனேவில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, மஹாராஸ்ட்ரா, ராஜஸ்த்தான், பஞ்சாப், மத்திய பரதேஷ், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 15 மாநிலங்களில் இருந்தி 300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகம் சார்பாக கோவை, திருச்சி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவடங்களிலிருந்து 57 மாணவர்கள்,17 மாணவிகள் என மொத்தம் 74 பேர் கலந்து கொண்டனர்.இப்போட்டியில் 10,12,14,18 வயதினருக்கு உட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.இதில் 18 வயதினருக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த மாணவர் அஸ்வின் கலந்துகொண்டார். இவர் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இறுதி போட்டியில் தங்கம் வென்றார்.

இதன் மூலம் மாணவர் அஷ்வின் ஆசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார்.மேலும், இப்போட்டியில் தமிழக அணி மொத்தம் 6 பிரிவுகளில் தங்கம் வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க