• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோவை மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

June 19, 2024 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோவை மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய செயலாளர் டாக்டர்.ஆ.ஹென்றி கலந்து கொண்டு ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பல்வேறு சவால்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோவை மண்டல பொறுப்பாளர்கள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் கோவை, அவிநாசி சாலையில் உள்ள ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. ஃபேரா கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் நேரு நகர் நந்து தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை தேசிய செயல் செயலாளர் செந்தில்குமார் ஒருங்கிணைத்தார்.தேசிய செயற்குழு தலைவர் வினோத் சிங் ரத்தோர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இக்கூட்டத்தில் FAIRA கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கலந்து கொண்டு ரியல் எஸ்டேட் துறையில் தற்போது சந்தித்து வரும் சவால்கள் குறித்து மண்டல பொறுப்பாளர்களிடையே ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பதிவுத்துறையில் பன்மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிற நிலங்களின் மீதான அரசு வழிகாட்டி மதிப்பு குறித்த வரைவு தற்போது பதிவுத்துறை இணையதளத்தில் மட்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இது கிராமப்புறங்களில் இருக்கிற பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியாமல் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே இந்த அரசு வழிகாட்டி மதிப்பு உயர்வு குறித்த வரைவு சம்பந்தமான தகவல்களை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களின் வெளியில் உள்ள தகவல் பலகையில் ஒட்டி, வகைபாடு மதிப்பின் அடிப்படையில் இல்லாமல், தெரு மதிப்பு மற்றும் சர்வே எண் மதிப்பின் அடிப்படையில் நிர்ணயித்து,அதனை அனைத்து பொதுமக்களும் அறியும் வண்ணம் புதிய வழிகாட்டி மதிப்பு வரைவினை வெளியிட வேண்டும் என கேட்டு கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர்,ரியல் எஸ்டேட் தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் பொது அதிகார ஆவணத்திற்கு விண்ணை மட்டும் முத்திரைத் தீர்வை கட்டணம் ஒரு சதவீதம் மற்றும் கண்ணை கட்டும் பதிவு கட்டணம் ஒரு சதவீதம் என்ற கட்டணத்தை திரும்பப் பெற்று, முன்பு இருந்தது போல பதிவு கட்டணம் மட்டும் ரூபாய் 10,000 என மாற்றியமைத்து உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டுமாறு கேட்டு கொண்டார்.

மேலும்,ரியல் எஸ்டேட் துறை சார்ந்த தொழில் செய்து வருபவர்களுக்கு தற்போது ஊரக உள்ளாட்சி துறையில் உள்ள தலைவர் மற்றும் பிரதிநிதிகளால் மிகப்பெரிய பிரச்னைகள் இருப்பதாக கூறிய அவர்,ஒட்டு மொத்த சாதாரண வீடு கட்டும் பொதுமக்களுக்கும் பிரச்னைகள் இருப்பதாக கூறினார்.உள்ளூர் திட்ட குழுமம் போன்ற துறை சார்ந்தவர்களிடம் இருந்து போதிய அனுமதி பெற்றிருந்தாலும், இந்த ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் எங்களை போன்ற ரியல் எஸ்டேட் செய்யும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்காமல், எங்களை நசுக்குகின்ற வகையி்ல்,ஒரு ஏக்கருக்கு பத்து இலட்சம் ரூபாய் வேண்டும் என பங்கு கேட்பதாக வேதனை தெரிவித்தார்.

கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்யும் எங்களை போன்றவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஒரு சாதாரண கையெழுத்திற்காக கூனி குறுகி கைகட்டி இறுதி ஒப்புதல் வாங்குவதற்காக நிற்கும் அவலம் இருப்பதாக காட்டம் தெரிவித்தார். அனைத்து ஆவணங்களும் அரசு விதிகளின் படி சரியாக இருந்து தரச்சான்றிதழ் கொடுத்தாலும் இறுதி ஒப்புதல் தருவதற்கு ஊரக,உள்ளாட்சி தலைவர்கள் இழுத்தடித்து பாடாய் படுத்துவதாக கூறிய அவர்,இதனால் நிம்மதியாக தொழில் செய்ய முடிவதில்லை என வேதனையுடன் கூறினார்.எனவே இறுதி ஒப்புதலை ஒற்றை சாளர முறையில் கொண்டு வந்து,டி.டி.சி.பி.யே கொடுத்தாலே போதும் என்றார்.

பஞ்சாயத்து தலைவர்கள் துறை சார்ந்து பொறியாளர்களை போல பல்வேறு காரணங்களை கூறுவதாக தெரிவித்த அவர்,எனவே தயவு செய்து இதை அரசு கவனத்தில் எடுத்து இறுதி ஒப்புதல் கோரி விண்ணப்பித்தால் பதினைந்து நாட்களுக்குள் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார். கூட்டத்தில்,தேசிய மற்றும் மாநில பொறுப்பாளர்கள் கண்ணன் என்கிற பாலசண்முகம்,சந்திரசேகர்கார்த்திக்,கணேசன்,முரளிதரன்,ராமநாதன் சியாம் கார்த்திக் சுரேஷ்குமார்,வில்சன் P.தாமஸ் , கருப்புசாமி,பாலசுப்ரமணி,விஜி,அசோக் குமார்,நிவாஸ்,கணேஷ் குமார், செல்வகுமார்,தியாகராஜன் விஸ்வநாதன் , கார்த்திக், சிந்து K ராமமூர்த்தி,ஹரி கிருஷ்ணன் , கண்ணன், குமார், கிருஷ்ணமூர்த்தி,சரவணகுமார்,பிரபு , மெடிக்கல் நாராயணன், தீர்த்தகிரி , சந்தோஷ் குமார்,உட்பட கோவை மண்டல பொறுப்பாளர்கள் தேசிய மாநில மாவட்ட தாலுகா நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க