• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்களை சசிகலா நீக்கினார்

February 14, 2017 தண்டோரா குழு

முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்த அமைச்சர் ‘மாஃபா’ பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி உள்ளிட்ட 18 பேரைக் கட்சியிலிருது நீக்கி, பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார்.

“என்னைக் கட்டாயப்படுத்தித்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார்கள்” என்று தமிழக முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் கடந்த வாரம் அளித்த பரபரப்பான பேட்டியைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களம் சூடுபிடித்தது. இதனால் அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாகப் பிரிந்துள்ளது.

இதன் பின்னர், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு தொடர்ந்து அதிமுக சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து ஆதரவளிக்கத் தொடங்கினார்கள். அவர்களில் இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்த அமைச்சர் ‘மாஃபா’ பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட 18 பேரைக் கட்சியிலிருந்து நீக்கி பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார்.

அதே சமயம், ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளித்த அதிமுக எம்பிக்கள் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க