• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக இரு அணிகள் பிரிந்த இடத்தில் மீண்டும் இணையுமா ?

August 18, 2017 தண்டோரா குழு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக ஓபிஎஸ் அணி சசிகலா என இரண்டு அணிகளாக பிரிந்து தற்போது ஓபிஎஸ் அணி , எடப்பாடி அணி, தினகரன் அணி என மூன்று அணிகளாக பிரிந்து உள்ளது.

பல்வேறு கட்ட முயற்சிக்கு பின் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணி தற்போது இணைவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையில்,கடந்த பிப்ரவரி 7 ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் தான் சசிகலாவுக்கு எதிரான முடிவை ஓ.பன்னீர்செல்வம் எடுத்தார்.இந்நிலையில் 6 மாதங்களுக்கு பிறகு பன்னீர்செல்வமும், எடப்பாடியும் வருவதால் ஜெயலலிதா நினைவிடத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பிரிவதாக முடிவு எடுத்த இடத்திலேயே எடப்பாடி அணியுடன் இணயை திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஜெயலலிதா நினைவிடத்திற்கு இரவு 7.30 மணிக்கு செல்கின்றனர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க