August 18, 2017
தண்டோரா குழு
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக ஓபிஎஸ் அணி சசிகலா என இரண்டு அணிகளாக பிரிந்து தற்போது ஓபிஎஸ் அணி , எடப்பாடி அணி, தினகரன் அணி என மூன்று அணிகளாக பிரிந்து உள்ளது.
பல்வேறு கட்ட முயற்சிக்கு பின் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணி தற்போது இணைவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையில்,கடந்த பிப்ரவரி 7 ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் தான் சசிகலாவுக்கு எதிரான முடிவை ஓ.பன்னீர்செல்வம் எடுத்தார்.இந்நிலையில் 6 மாதங்களுக்கு பிறகு பன்னீர்செல்வமும், எடப்பாடியும் வருவதால் ஜெயலலிதா நினைவிடத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பிரிவதாக முடிவு எடுத்த இடத்திலேயே எடப்பாடி அணியுடன் இணயை திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஜெயலலிதா நினைவிடத்திற்கு இரவு 7.30 மணிக்கு செல்கின்றனர் என எதிர்பார்க்கப்படுகிறது.